நல்வரவு

வணக்கம் !

Thursday 11 February 2016

என் ஆசானின் தொண்ணூறாம் பிறந்த நாள் இன்று!


என் தந்தை தொண்ணூற்று ஒன்றாம் அகவையில் அடியெடுத்து வைக்கும் இந்நாளில், அவரைப் பற்றிய சில நினைவலைகளைப் பகிர்ந்து கொள்ள விழைகின்றேன்:- 

இலக்கியச்சாரல் திரு சொ.ஞானசம்பந்தன் அவர்கள் தாம், என் தந்தை, ஆசான், வழிகாட்டி எனத் தெரிவிப்பதில் அகமிக மகிழ்கின்றேன். 

பதிவுலகில் திரு.கோபு சார், தனபாலன் சார், அண்ணன் முத்துநிலவன் எனச் சிலருக்கு மட்டுமே தெரிந்த இவ்வுண்மையை, இன்று எல்லோரும் அறியும்படியாகத் தெரிவிப்பதில், பெருமை கொள்கின்றேன்.